புதன், 9 மார்ச், 2011

இனிய வணக்கங்கள்...

ஒரு இதயம் துடிக்கும் போது யாரும் கவனிக்க மாட்டார்கள்
ஆனால்
அது நின்ற பிறகு எல்லோறும் துடிப்பார்கள்.


கண் இல்லாமல் காதல் வரலாம்....
கற்பனை இல்லாமல் கவிதை வரலாம்....
ஆனால் உண்மையான அன்பு இல்லாமல்...
நட்பு வருமா?


நட்பு என்பது சூரியன் போல் எல்லா நாளும் பூரணமாய் இருக்கும் !
நட்பு என்பது கடல் அலை போல் என்றும் ஓயாமல் அலைந்து வரும் !
நட்பு என்பது அக்னி போல் எல்லா மாசுகளையும் அழித்துவிடும் !
நட்பு என்பது தண்ணீர் போல் எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் !
நட்பு என்பது நிலம் போல் எல்லாவற்றையும் தாங்கி கொள்ளும் !
நட்பு பூப்பதற்கு சலனமோ அர்த்தமற்ற உணர்ச்சிகளோ தேவையில்லை...
நட்பு உறவாட உங்கள் மனதில்
சிறு வேர் தழைத்து இருந்தாலே போதுமானது!...
வார்த்தைகளில் பரிமாறப்படும் தோழமை - அதற்கு
உயிர் கொடுத்து தழைக்க செய்து விடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக